*

புத்திசாலி இந்தியன்

அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நம்மாள் காலை உணவைச் சாப்பிட்டு கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சூயிங்கத்தை மென்று கொண்டு அங்கு வந்த அமெரிக்கன் இந்தியன் பக்கத்தில் அமர்ந்தான். ஆனால் நம்மாள் அமெரிக்ககாரனை கண்டுகொள்ளாமல் சாப்பிடுவதில் மும்முரமாய் இருந்தார். இருந்தாலும் அமெரிக்கன் விடாமல் நம்மாளை பார்த்து என்ன ரொட்டி சாப்பிடுறாயானு கேட்டதும் ஆமாம் என்றார் இந்தியன்.ஆனால் நாங்கள் ரொட்டியை முழுவதுமாய் சாப்பிடாமல் நடுவில் உள்ளதை மட்டும் சாப்பிடுவோம்.
அதன் ஓரங்களை ஒரு பெட்டியில் போட்டு வேதியியல் மாற்றங்களுக்கு பின்பு மாவாக்கி இந்தியாவுக்கு விற்றுவிடுவோம் என்றான் அமெரிக்கன். நம்ம ஆள் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.ரொட்டியோடு சேர்த்து ஜாம் சாப்பிடுவதுண்டானு கேட்டதும் ஆமாம் என்றான் இந்தியன். உடனே அமெரிக்கன் நாங்கள் வெறும் பழங்களை மட்டுமே காலை உணவாக உண்போம். அந்த பழங்களின் விதைகளையும் தோலையும் சில முறைகளை கையாண்டு அதை ஜாம் செய்து இந்தியர்களுக்கு விற்றுவிடுவோம் என்றான். பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த இந்தியன் மெதுவாய் அமெரிக்கனை பார்த்து நீங்கள் ஆணுறையை என்ன செய்வீர்கள் என்று கேட்க, அவனோ உடலுறவுக்கு பின் அதை தூர எறிந்து விடுவோம் என்றான். நம் இந்தியனோ நாங்கள் அப்படி எல்லாம் தூக்கி எறியாமல் உடலுறவுக்கு பின்னால் அந்த ஆணுறையை இயந்திரங்களின் உதவியால் அதை சூயிங்கமாய் செய்து அமெரிக்காவுக்கு விற்றுவிடுவோம் என்றதும் அமெரிக்கனின் முகம் பேயறைந்தது போன்று ஆனதாம்.

No comments:

Post a Comment